அண்ணன், தம்பிக்கு இடையே இடம்பெற்ற சண்டையை தடுக்க முயன்ற பேர்த்தியார் கத்திக் குத்துக்கு இலக்காகிச் பரிதாபகமாக உயிரிழந்தார். 16 வயதான பேரனின் கத்துக்குத்துக்கு இலக்காகி 72 வயதான சுப்ரமணியம் கங்கேஸ்வரி என்பவரே உயிரழந்தவராவார்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுப்பதற்கு அவர்களது தாய் வழிப் பாட்டி முயற்சித்துள்ளார்.
அப்போது மூத்த சகோதரனுக்கு கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்ற போது கத்தி பாட்டியின் நெஞ்சில் பாய்ந்தது.பாட்டி கத்திக் குத்தில் காயமடைந்ததையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவரின் உயிர் வழியில் பிரிந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 16 வயதுடைய சுபாஷ் சசிகரன் என்ற மாணவனைக் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.